Tuesday, June 22, 2010

பாப்புலர் V முத்தையா கடந்து வந்த பாதை

சங்கணாங் குளம்!..வெம்மை மட்டுமே அப்பியிருக்கும் ஒரு கிராமம்...திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்கு அப்பால் திசையன்விளை நோக்கி பயணிக்கும் வழியில் வெள்ளந்தி மனிதர்களைப் பிரசவிக்கும் இந்த கிராமத்தில்தான் ஓர் ஏழைக் குடும்பத்தின் மூன்றாவது முத்தாக திரு முத்தையா அவர்கள் பிறந்தார்....
அவரது தந்தை திரு M.வள்ளிநாயகம்,தாயார் திருமதி V.லெட்சுமியம்மாள்..
உடன்பிறந்தவர்கள் 2 சகோதாரர்கள்,2 சகோதரிகள்...இவரது குடும்பம் சிறு வயதிலேயே ஏழ்மையின் நிமித்தம் திருநெல்வேலி டவுணுக்கு புலம்பெயர்ந்ததால் இவரது வாழ்க்கை நகர் சார்ந்த சூழலுக்கு மாறியது.....இருப்பினும் தனது ஏழ்மைத் தன்மை மாறாது கிராமத்திற்கேயுரிய தாய்த் தன்மையோடு தன் சக மனிதர்களை அனுகினார்...
தனது பள்ளி வாழ்க்கையை கதீட்ரல் பள்ளியில் தொடங்கியவர் மேல் நிலைக் கல்வி வரை அங்கேயே தொடர்ந்தார்..
சிறு வயதிலேயே அதீத சுறுசுறுப்பும்,துள்ளலும்..மானுட சேவை குறித்த தீவிர முனைப்பும் அவரிடையே நிரம்பியிருந்ததால் நண்பர்களும் நிரம்பியிருந்தனர்...
தனது 13 வது அகவையிலேயே தன் நண்பர்களை இணைத்துக்கொண்டு,வீதிகளில் உண்டியல் ஏந்தி,அதன் மூலம் கிடைத்த நிதியில் பொதுமக்களின் நலனுக்காக பாளையில் ஒரு பேருந்துநிறுத்தத்தை ஏற்படுத்திக் கொடுத்து(ராம்பாப்புலர் பஸ்டாண்ட்) அனைத்து சமூக மக்களையும் ஆச்சரியப்பட செய்தவர்.இதுவே அவர்தம் அரசியல் பொதுவாழ்க்கையில் முதல் மைல்கல்லாக கருதப்படுகிறது....
மாண்புமிகு புரட்சித்தலைவர் MGR மீதிருந்த பக்தியின் நிமித்தம் அவர்தம் வழியில் தம் பயணத்தை தொடங்க 1979 ஆம் ஆண்டு தங்கத் தமிழன் எம்.ஜி.ஆர் மன்றம் தொடங்கி வைத்து அதற்கான அலுவலகமும் ஏற்படுத்திக் கொடுத்தார்....
அதன்பிறகே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார்...
அவர்தம் தீவிர செயல்பாடு,அனைத்து சமூகத்தினரையும் இணைக்கும் பாங்கு,கடின உழைப்பு போன்றவை அவரை இளம் வயதிலேயே பாளையங்கோட்டூர் பகுதி பஞ்சாயத்து தலைவராக பதவியேற்க வைத்தது..
1986 ஆம் ஆண்டு அவர் பஞ்சாயத்து தலைவராகப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களைஅறிவித்து ,செயல்படுத்தி மக்களின் ஒருமித்த ஆதரவைப் பெற்றார்..(.Nellai City AIADMK: பாப்புலர் V.முத்தையா அவர்கள் பாளையங்கோட்டூர் ஊராட்சிமன்ற தலைவராக பதவியேற்ற காலத்தில் செய்த சேவைகள்)
அதன் பிறகு பாளை பகுதி இளைஞரணி கழக செயலாளராகவும்,தொடர்ந்து முறையே 15 மற்றும் 16 வது வட்டச் செயலாளராகவும் திறம்பட செயாலாற்றி வெற்றிகண்டார்..
1996 லிருந்து 2007 வரை பாளை பகுதி கழக செயலாளராக சிறப்பாக செயலாற்றினார்...இக் காலத்தில்தான் கழகத்தை சார்ந்த 27 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை மிகப் பிரம்மாண்டமாக நடத்திவைத்தார்.
20/01/2007 முதல் மாண்புமிகு புரட்சித்தலைவி ,கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் அம்மாவின் ஆணைக்கிணங்க நெல்லை மாநகர மாவட்ட செயலாளராகப் பொறுப்பேற்று பல் வேறு நலத்திட்ட உதவிகளோடு ,கழகத்தினரை அன்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தி,சிறப்பாக செயல்பட்டு வருகிறார்..மாநகர மாவட்ட செயலாளராக பதவியேற்ற உடனேயே முதல் அறிவிப்பாக மைனாரிட்டி திமுக அரசு கலையும் வரை சனிக் கிழமை தோறும் வாராந்திரப் பொதுக்கூட்டம் நடைபெரும் என அறிவித்து இன்று வரை 125 தொடர் பொதுகூட்டங்களை சிறப்பாக நடத்தி வெற்றிகண்டு வருகிறார்...பொது மக்களிடமும்,கழகத் தொண்டர்களிடமும் சிறப்பான வரவேற்பை பெற்று அவர்களின் குறைகளைக் கேட்டுத், தெரிந்து அதனை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார்..